பரிஸ் - தொடரூந்துக்கு முன்னால் பாய்ந்து நபர் தற்கொலை! - போக்குவரத்து பாதிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  தொடரூந்துக்கு முன்னால் பாய்ந்து நபர் தற்கொலை!  போக்குவரத்து பாதிப்பு!!

நபர் ஒருவர் வழி 6 தொடரூந்துக்கு முன்ன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை அடுத்து போக்குவரத்து தடை ஏற்பட்டது. 
 
இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை இரவு பரிசின் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Quai மெற்றோ நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. வழி 6 தொடரூந்துக்காக காத்திருந்த நபர், எதிர்பாரா வேளையில் தொடரூந்துக்கு முன்னால் பாய்ந்துள்ளார். அதைத்தொடர்ந்து குறித்த நபர் நடை மேடைக்கும் தொடரூந்துக்குமிடையே சிக்குண்டு உயிரிழந்துள்ளார். மீட்புக்குழுவினர் சடலத்தை மீட்க பெரிதும் போராடினர். இதனால் சனிக்கிழமை அதிகாலை 2 வரை போக்குவரத்து தடைப்பட்டது. 
 
பின்னர், Bercy இல் இருந்து Porte d'Italie வரை பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து,  சனிக்கிழமை காலை வழமைக்குத் திரும்பியது. சடலம் இழுத்துச்செல்லப்பட்டதில் Bercy மேம்பாலத்துக்கு அருகே வைத்து மீட்புப்பணி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை