சினிமாவை விட்டு விலக முடிவு : ப்ரியா ஆனந்த் அதிரடி

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
சினிமாவை விட்டு விலக முடிவு : ப்ரியா ஆனந்த் அதிரடி

தான் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருந்த நேரத்தில் தான் கூட்டத்தில் ஒருவன் படத்தின் வாய்ப்பு வந்ததாக நடிகை ப்ரியா ஆனந்த் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஒருவன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப்ரியா ஆனந்த் “இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நான் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்தது.

அப்போது சில சூழ்நிலைகள் காரணமாக, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட முடிவு செய்திருந்தேன். வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அது பலருக்குத் தெரியாது.

அந்த நேரத்தில்தான் இந்தக் கதை என்னிடம் வந்தது. பாசிட்டிவான கதை. கேட்டவுடன், இந்த மாதிரி கதைகள் வரும்போது ஏன் சினிமாவை விட வேண்டும் என்று நினைத்தேன்.

உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். அசோக் செல்வன் நடிக்கிறார், நல்ல டூயட் இருக்கும் என்று நம்பினேன். முதல் நாளன்று அவரது கெட்டப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.

மூலக்கதை