யாழில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

TAMIL CNN  TAMIL CNN
யாழில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குளி பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்களிடம் இருந்து 2 உந்துருளிகள் உள்ளிட்ட பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. விசாரணையின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். The post யாழில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை