பாரிய இலக்கை அடைந்து வெற்றி பெற்ற இலங்கை அணி!
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் சற்று முன்னர் முடிவிற்கு வந்தது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாடி 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிக்காமல் 66 ஓட்டங்களையும், சவுமிய சர்க்கார் 51 ஓட்டங்களையும், மெஹமதுல்லா 43 பெற்று கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜீவன் மெண்டிஸ் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஆரமப துடுப்பாட்ட வீரர்களான குணதிலக மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினர்.
இதில் குஷால் மெண்டிஸ் 27 பந்துகளில் 53 ஓட்டங்களையும், தொடந்து குணதிலக 15 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சனாக மற்றும் பெரேரா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதில் சனாக 24 பந்துகளில் 42 ஊட்டங்களையும், அதிரடியில் மிரட்டிய பெரேரா 18 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன் காரணமாக 16.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து 194 என்ற வெற்றி இலக்கை அடைந்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக குஷால் மெண்டிஸ் தேர்வானார்.