மீண்டும் அணியில் இணைகிறார் பென் ஸ்டொக்ஸ்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டொக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைந்து விளையாடவுள்ளார்.
அந்த வகையில் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ரி-20 போட்டியில் விளையாடுவதற்கு இன்று (புதன்கிழமை) நியூஸிலாந்துக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் விடுதியொன்றில் குடிபோதையில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் குறித்து இவர்மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் பென் ஸ்டொக்ஸிற்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது.
இதனையடுத்து நியூஸிலாந்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியுடன் இணைந்து விளையாடுவதற்கு அவரிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.