தென்னாபிரிக்க அணியில் திடீர் மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தென்னாபிரிக்க அணியில் திடீர் மாற்றம்!

இந்திய அணியுடன் ரி-20 போட்டியில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் தலைவராகஜே.பி.டுமினி நியமிக்கப்பட்டுள்ளார்.

 
இந்தியாவுடனான தொடரையடுத்து அவுஸ்ரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா விளையாடவுள்ளதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையிலேயே ஜே.பி.டுமினி தலைவராகச் செயற்படவுள்ளார்.
 
இந்தியாவுக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ் பார்க்கில் நடைபெறவுள்ளது. 
 
இந்தப் போட்டிக்கு கிறிஸ்டியன் ஜோன்கர், ஜூனியர் டலா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகிய வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
 
 
அந்தவகையில் தென்னாபிரிக்க அணியில் ஜே.பி.டுமினி (தலைவர்), பெகார்தின், ஜூனியர் டலா, டி வில்லியர்ஸ், ரிஸா ஹெண்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜோன்கர், ஹென்ரிச் கிளாஷன், டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், டென் பட்டர்சன், பங்கிஷோ, பெலுக்வயோ, தபராஸ் ஷம்சி மற்றும் ஜோன் ஸ்மட்ஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

 

மூலக்கதை