ஐபிஎல் மூலம் பிரபலம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் விளையாடுகிறார் ஜோப்ரா ஆர்ச்சர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் மூலம் பிரபலம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் விளையாடுகிறார் ஜோப்ரா ஆர்ச்சர்

லாகூர்: பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் ஜோப்ரா ஆர்ச்சர். வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர்.

அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7. 2 கோடிக்கு ஏலம் எடுத்ததுதான் ஆச்சரியத்திற்கு காரணம். அவ்வளவாக சர்வதேச அறிமுகம் இல்லாத ஜோப்ரா ஆர்ச்சரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது.

ஐபிஎல் மட்டுமின்றி, பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரிலும், ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவுள்ளார்.

பிஎஸ்எல் 3வது சீசன் பிப்ரவரி 22ம் தேதி தொடங்குகிறது.

இதில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுகிறார். எனினும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.



.

மூலக்கதை