ரூ.12,800 கோடி உரிமை பங்குகள் டாடா ஸ்டீல் வெளியிடுகிறது

தினமலர்  தினமலர்
ரூ.12,800 கோடி உரிமை பங்குகள் டாடா ஸ்டீல் வெளியிடுகிறது

புதுடில்லி : டாடா ஸ்டீல் நிறு­வ­னம்,அதன் பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, 12,800 கோடி ரூபாய் மதிப்­பி­லான, உரிமை பங்­கு­களை வெளி­யி­டு­கிறது.இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நிறு­வ­னம், அதன் வர்த்­தக செயல்­பா­டு­கள் மற்­றும் வளர்ச்சி திட்­டங்­க­ளுக்கு நிதி திரட்ட, உரிமை பங்­கு­களை வெளி­யி­டு­வது என, முடிவு செய்­து உள்­ளது. இதற்கு, நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.இதை­ய­டுத்து, சாதா­ரண பங்­கு­கள் மற்­றும் பங்கு சார்ந்த பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 12,800 கோடி ரூபாய்க்கு மிகா­மல் திரட்ட முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.இதில், 15.53 கோடி அளிக்­கப்­பட்ட சாதா­ரணபங்­கு­கள் வாயி­லாக, 8,000 ரூபாய்க்கு மிகா­மல் திரட்­டப்­படும். இதே போல, 7.76 கோடி அளிக்­கப்­பட்ட சாதா­ரண பங்­கு­கள் மூலம், 4,800 கோடி ரூபாய்க்கு மேற்­ப­டாத தொகை திரட்­டப்­படும்.தற்­போ­துள்ள நிறு­வ­னத்­தின் பங்கு முத­லீட்­டா­ளர்­கள், இப்­பங்கு வெளி­யீட்­டில் பங்­கேற்­க­லாம்.இப்­பங்கு வெளி­யீடு, பிப்., 14ல் துவங்கி, 28ல் முடி­வ­டை­யும். சாதா­ரணபங்கு ஒன்­றின் முக மதிப்பு, 10 ரூபாய். பதிவு தேதி உள்­ளிட்ட விப­ரங்­கள், விரை­வில் அறி­விக்­கப்­படும்.உரிமை பங்கு வெளி­யீட்டு ஆவ­ணங்­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளுக்­கும், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’க்கும் அளிக்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை