இந்திய அணியில் மாற்றம்?

PARIS TAMIL  PARIS TAMIL
இந்திய அணியில் மாற்றம்?

தென் ஆபிரிக்க தொடரில் சிறந்த மற்றும் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டிருக்கவில்லை என அணி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
 
அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜோகன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் மற்றும் டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோரை சேர்த்துக் கொள்ளவும் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
 
கேப்டவுன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததன் மூலம் தொடரை இழந்துள்ள இந்திய அணியில் அடுத்த போட்டிக்கு சைனி சேர்க்கப்படுவது மிகவும் முக்கியம் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சைனி அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்கப்படும் அதேவேளை தென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் ஷர்துல் தாகூர் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலக்கதை