சந்தாதாரர் பணத்தை திரும்ப தர அனில் அம்பானிக்கு, ‘டிராய்’ உத்தரவு

தினமலர்  தினமலர்
சந்தாதாரர் பணத்தை திரும்ப தர அனில் அம்பானிக்கு, ‘டிராய்’ உத்தரவு

புதுடில்லி : மொபைல் ­போன் சந்­தா­தா­ரர்­களின் பயன்­ப­டுத்­தப்­ப­டாத தொகையை திரும்ப அளிக்­கு­மாறு, அனில் அம்­பா­னி­யின் ‘ஆர்­காம்’ நிறு­வ­னத்­திற்கு, ‘டிராய்’ உத்­த­ர­விட்­டுள்­ளது.

‘ஆர்­காம்’ எனப்படும், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னம், கடன் நெருக்­கடி கார­ண­மாக. அதன் மொபைல் ­போன் சேவை­யின் ஒரு பகு­தியை, 2017, டிச., 1ல் நிறுத்­தி­யது. இத­னால், பாதிக்­கப்­பட்ட ஏரா­ள­மான சந்­தா­தா­ரர்­கள், தொலை­தொ­டர்பு ஒழுங்­கு­முறை ஆணை­ய­மான ‘டிராய்’யிடம் புகார் அளித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, டிராய், ஆர்­காம் நிறு­வ­னத்­திற்கு அனுப்­பி­யுள்ள கடி­தம்: தொலை­ தொ­டர்பு சேவை நிறுத்­தப்­பட்­ட­தால், ஏரா­ள­மா­னோர், மொபைல் ­போன் சேவையை தொடர முடி­யா­ம­லும், வேறு நிறு­வ­னத்­திற்கு இன்­னும் மாறா­ம­லும் உள்­ள­னர். அத­னால், ‘போஸ்ட் பெய்டு, பிரீ­பெய்டு’ வாடிக்­கை­யா­ளர்­களின் பயன்­ப­டுத்­தப்­ப­டாத தொகை மற்­றும் வைப்­புத் தொகையை, சந்­தா­தா­ரர்­க­ளு­க்கு திரும்ப அளிக்க வேண்­டும். இது தொடர்­பாக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை குறித்து, பிப்., 15 – மார்ச், 31க்குள் தெரி­விக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை