ரூ.4,000 கோடியில் ஆர்காம்; கடலடியில் கேபிள் பதிப்பு
மும்பை : அனில் அம்பானியின், ‘ஆர்காம்’ எனப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், கடலடியில் கேபிள் அமைக்கிறது.
ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் வகையில், 68 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு, கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கப்பட உள்ளது.இதன் மூலம், இந்தியாவில் இருந்து, மேற்கில் இத்தாலியும், கிழக்கில் ஹாங்காங்கும் கம்பி வட இணைப்பை பெறும். குளோபல் கிளவுட் எக்ஸ்சேஞ்ச் என்ற துணை நிறுவனம் மூலம், கேபிள் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டப் பணிகள் முடிவடைந்து, 2020 அக்., முதல், கேபிள் வழியாக, தரவு பரிமாற்ற சேவைகள் துவங்கும். இதன் மூலம், தற்போதுள்ள தரவு பரிவர்த்தனை திறன், 10 மடங்கு அதிகரிக்கும், நிறுவனத்திற்கு ஆண்டுக்கு, 6,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இத்திட்டத்திற்கு, அலிபாபா உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள், 50 சதவீத நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக, ஆர்காம் தெரிவித்துள்ளது.