‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே பில்’:பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது

தினமலர்  தினமலர்
‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே பில்’:பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது

புதுடில்லி:நாடு முழு­வ­தும், சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, ‘இ – வே பில்’ எனப்­படும், மின்­னணு வழித்­தட ரசீது நடை­முறை, பிப்., 1 முதல் அம­லுக்கு வரு­கிறது.
இது குறித்து, ‘ஜி.எஸ்.டி., நெட்­வொர்க்’ நிறு­வ­னம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை:ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி திட்­டத்­தில், மாநி­லங்­கள் இடையே, 10 கி.மீ., துாரத்­திற்கு மேல் எடுத்­துச் செல்­லப்­படும், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் மதிப்­புள்ள சரக்­கிற்கு, பிப்., 1 முதல், ‘இ – வே பில்’ கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது.பதிவுஏற்­க­னவே, கேரளா, கர்­நா­டகா, ராஜஸ்­தான், உத்­த­ர­கண்ட் ஆகிய நான்கு மாநி­லங்­களில், ‘இ – வே பில்’ நடை­முறை அம­லில் உள்­ளது. இம்­மா­நி­லங்­கள், தின­மும், 1.40 லட்­சம், ‘இ – வே பில்’களை தயா­ரிக்­கின்றன.இதர மாநி­லங்­க­ளுக்கு, இம்­மாத இறுதி வரை, சோதனை அடிப்­ப­டை­யில், ‘இ – வே பில்’ மூலம், சரக்கு போக்­கு­வ­ரத்து மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், www.ewaybill.nic.in வலை­த­ளத்­தில், அவற்­றின், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்ணை குறிப்­பிட்டு, பதிவு செய்து, ‘இ – வே பில்’ தயா­ரிக்­க­லாம்.ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­யாத சரக்கு போக்­கு­ வ­ரத்து நிறு­வ­னங்­கள், ‘பான்’ அல்­லது ‘ஆதார்’ எண் வழங்கி, பதிவு செய்­ய­லாம்.அனை­வ­ருக்­கும், ‘ஆன் லைன்’ மூலம், ‘அலர்ட் மெசேஜ், எஸ்.எம்.எஸ்.,’ ஆகி­யவை அனுப்­பப்­படும்.‘இ – வே பில்’ தயா­ரிக்­கும் போது, நிறு­வ­னங்­கள் அல்­லது சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், சரக்கு எடுத்­துச் செல்­லப்­படும் வாக­னத்­தின் பதிவு எண்ணை குறிப்­பி­ட­லாம். வாக­னம் பழு­தாகி நின்­றாலோ அல்­லது வேறு வாக­னத்­திற்கு சரக்­கு­களை மாற்­றி­னாலோ, பதிவு எண்ணை மாற்றி கொள்­ள­லாம்.‘இ – வே பில்’ தயா­ரித்த, 24 மணி நேரத்­திற்­குள், அதை ரத்து செய்­யும் வச­தி­யும் உள்­ளது. மோட்­டார் இன்­ஜின் பொருத்­தப்­ப­டாத வாக­னங்­களில் எடுத்­துச் செல்­லப்­படும் சரக்­கு­க­ளுக்கு, ‘இ – வே பில்’ தேவை­யில்லை.
விலக்கு
காய்­க­றி­கள், பழங்­கள், மீன், குடி­நீர் ஆகி­ய­வற்றை எடுத்­துச் செல்­வ­தற்­கும் விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. சரக்கு போக்­கு­வ­ரத்­தில், வரி ஆய்­வா­ளர் கேட்­டால், ‘இ – வே பில்’ காண்­பிக்­கப்­பட வேண்­டும். ஆய்­வா­ளர், சரக்கு வாக­னத்தை, 30 நிமி­டங்­க­ளுக்கு மேல் நிறுத்தி வைத்­தால், அது­பற்றி, வாகன ஓட்­டு­னர், வலை­த­ளத்­தில் புகார் தெரி­விக்­க­லாம். இதற்­கான வழி­மு­றை­கள், வலை­த­ளத்­தில் உள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
அலைச்சல் இல்லை
இனி, வரி செலுத்­து­வோர் மற்­றும் சரக்கு போக்­கு­ வ­ரத்து நிறு­வ­னங்­கள், சரக்­கு­களை, ஒரு மாநி­லத்­தில் இருந்து வேறு மாநி­லத்­திற்கு அனுப்­பு­வ­தற்­கான, ‘பாஸ்’ கோரி, வரி அலு­வ­ல­கத்­திற்கோ அல்­லது சோத­னைச்­சா­வ­டிக்கோ செல்ல தேவை­இல்லை. சுய­மா­கவே, வலை­த­ளத்­தில், மொபைல் ஆப், எஸ்.எம்.எஸ்., மூலம், ‘இ – வே பில்’ தயா­ரித்து, போக்­கு­வ­ரத்­திற்கு பயன்­ப­டுத்­த­லாம்.பிரகாஷ் குமார் ,தலைமை செயல் அதிகாரி, ஜி.எஸ்.டி.என்.,

மூலக்கதை