டொயோட்டா
அரசு ஊழியர்களுக்கான சலுகை நீட்டிப்புடொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, சில சலுகைகளை, 2016ல் அறிமுகம் செய்தது. அது முடிய இருந்த நிலையில், டிச., 31 வரை, அதை நீட்டித்துள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், இச்சலுகை வழங்கப்படுவதால், ‘டிரைவ் த நேஷன்’ எனும் இந்த முகாமுக்கு வரவேற்பு அதிகரித்தது. அதனால், ஒவ்வொரு காலாண்டாக அதை நீட்டித்து வருகிறது.இந்த முகாமில், டொயோட்டா, ‘இடியோஸ்’ வரிசை கார்கள், முன்பணம் செலுத்த தேவையின்றி, எட்டு ஆண்டுகள் கடன் தவணையில் விற்கப்படுகின்றன. இம்முகாம்களில், ‘கரோல்லா ஆல்டிஸ்’ காரையும் விற்பனை செய்ய, அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அந்த காரும், முகாமில் சேர்க்கப்பட்டு உள்ளது என,அந்நிறுவனத்தின் இயக்குனர், என்.ராஜா தெரிவித்து உள்ளார்.