கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்
உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ஏ - 380 ரக விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
எரிபொருள் பெற்றுகொள்வதற்காக இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இருந்து டுபாய் நகரம் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான ஒன்றே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.
எமிரேட்ஸ் விமானத்திற்கு சொந்தமான ஈ - கே 413 என்ற விமானம் இன்று காலை 5 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்து 6.45 மணிக்கும் அங்கிருந்து சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்தில் 405 பயணிகள் மற்றும் 25 ஊழியர்கள் உட்பட 430 பேர் பயணித்துள்ளனர்.