Roissy விமான நிலையத்தில் 300,000 யூரோக்கள் திருட்டு!!
நபர் ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து மூன்று இலட்சம் யூரோக்கள் பணத்தினை மிக நூதனமாக திருடியுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தாலும், இன்று புதன்கிழமையே இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து பணத்தினை திருடியுள்ளார். கண்ணாடி கதவு ஒன்றின் இயந்திர பூட்டினை மிக லாவகமாக திறந்து, உள்ளிருந்த இரண்டு பைகளை திருடிக்கொண்டு சென்றுள்ளார். அந்த பைகளுக்குள் மூன்று இலட்சம் யூரோக்கள் ரொக்கப்பணம் இருந்துள்ளது. திருடிய நபர் 50 வயதுகளை உடையவர் என காவல்துறையினர் தரப்பிப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதவுகளை திறக்கமுடிந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.