34 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - 20,000 வீடுகள் இருளில்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
34 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!  20,000 வீடுகள் இருளில்..!!

இன்று திங்கட்கிழமை காலையில் இருந்து பரவலாக பிரான்சின் 34 மாவட்டங்களுக்கு கடும் பனிப்புயல் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
34 மாவட்டங்களுக்கு கடும் பனி, பனிப்புயல், மோசமான காற்று மற்றும் பனிப்பாறை சரிவுகள், கடும் மழை உள்ளிட்ட பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 34 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பனி 15 செண்டிமீட்டர்கள் வரை பதிவாகும் எனவும், காற்றின் வேகம் 110 தொடக்கம் 130 கிலோமீட்டர்கள் வேகம் வரை வீசும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, பிரான்சின் கடல் கடந்த மாவட்டங்களிலும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் Météo-France கேட்டுக்கொண்டுள்ளது.

மூலக்கதை