செந்தனியில் குழு மோதல்! - வீதியில் நடந்து சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!!

PARIS TAMIL  PARIS TAMIL
செந்தனியில் குழு மோதல்!  வீதியில் நடந்து சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!!

செந்தனியில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில், வீதியில் சென்ற 38 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 
 
செந்தனியின் Bagnolet பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை 23h மணிக்கு இடம்பெற்றுள்ளது. பன்னிரெண்டு பேர்வரையான நபர்கள் குழு மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். குழு மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இரு நபர்கள் ஸ்கூட்டர் வகை உந்துருளியில் வந்ததாகவும், மோதலில் ஈடுபட்ட நபர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதன்போது வீதியில் சென்ற 38 வயதுடைய  நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காயமடைந்த நபர் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முழங்கால் பகுதியில் காயமேற்பட்டிருந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலக்கதை