Gard - A9 சாலையில் கோர விபத்து! - இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
Gard  A9 சாலையில் கோர விபத்து!  இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி!!

நேற்று சனிக்கிழமை இரவு A9 வீதியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவல் கொல்லப்பட்டுள்ளனர். மிக நீண்ட போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தது. 
 
முதலாவது விபத்து 23.49 மணிக்கு Montpellier-Orange நகரங்களை ஊடறுக்கும் சாலையில் Roquemaure நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த மூன்று மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளனது. இதில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மகிழுந்துக்குள் பயணித்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு SAMU மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மோசமாக காயமடைந்த சிலரை உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 
 
இந்த விபத்து இடம்பெற்ற ஒன்றரை மணிநேரத்தில் தீயணைப்பு படையினர் மீண்டும் அழைக்கப்பட்டனர். de Tavel நகரில் இரண்டாவது தடவையாக மீண்டும் விபத்து ஏற்பட்டது. பல மகிழுந்துகள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி மிக கோரமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப்பணிக்காக 13 உலங்குவானூர்திகள், 4 நோயாளர்காவு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டன. இரு விபத்துக்களை சேர்த்தும் மொத்தம் 20 பேர் காயமடைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று இடித்து விபத்துக்குள்ளாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை