ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்து பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் சாதனை

தினகரன்  தினகரன்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்து பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் சாதனை

புலவயோ: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஃபகார் ஜமான் பெற்றுள்ளார்.  சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோகித் சர்மா, கெய்ல், மார்டின் குப்தில் ஆகியோரை தொடர்ந்து இரட்டை சதமடிக்கும் 6 வது வீரர்  ஃபகார் ஜமான் ஆவார். பாகிஸ்தான் அணி ஜிம்பாபேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. புலவயோ என்ற இடத்தில் நடைபெற்ற 4 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்ட காரர்களாக களமிறங்கிய இமாம் உல் கக், ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடினர். ஃபகார் ஜமான் 156 பந்துகளில் 24 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 210 எடுத்து சாதனை படைத்தார். பாகிஸ்தான் வீரர் ஒருவர் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

மூலக்கதை