பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பெண்ணை கடத்திய ஐவர் கைது!  €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!

பெண் ஒருவரை கடத்திய வழக்கில் காவல்துறையினர் ஐவரை Val-de-Marne இல் வைத்து கைதுசெய்துள்ளனர். பெண்ணை கடத்தி அவரின் பெற்றோரிடம் இருந்து €700,000 யூரோக்கள் கேட்டிருந்ததாக அறிய முடிகிறது. 
 
கடந்த ஜூலை 11 ஆம் திகதி Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்படிருந்தார். 7 நாட்கள் அப்பெண்ணை கட்டிடம் ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்துள்ளனர். குறித்த பெண் அடித்து துன்புறுத்தல் போன்று எதுவும் இடம்பெறவில்லை. அதற்குள் கடத்தல்காரர்கள் அப்பெண்ணின் பெற்றோரிடம், பெண்ணை விடுவிக்க €700,000 யூரோக்கள் பணத்தினை கோரியிருந்தார்கள். ஆனால் ஏழாம் நாள் Villejuif பகுதியில் உள்ள அந்த கட்டிடத்தில் இருந்து பெண் தப்பித்துள்ளார். 
 
அதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகள் ஐவரையும் கைது செய்தனர். அவர்களை காவல்துறையினர் முன்னதாகவே அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்னதாகவும் பலரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும், அவையும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை