இறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்!!
பிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜோந்தாம் அதிகாரிகள் இதுபோன்ற ஒரு காரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை Normandy நகரில், அலுவலகத்தில் இருந்து போட்டியினை காண 110 கிலோமீட்டர்கள் அதிகூடிய வேகம் கொண்ட வீதியில் 182 கி.மீ வேகத்தில் குறித்த நபர் பயணித்துள்ளார். அதைத் தொடர்ந்து உடனடியாக குறித்த நபரின் சாரதி அனுமதி பத்திரம் ஆறு மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டது.
Saint-Lô மற்றும் Guilberville நகரங்களுக்கிடையே குறித்த நபர் மறிக்கப்பட்டிருந்தார். அவரின் மகிழுந்து முற்றாக சேதனையிட்ட பிறகு, 65 வயதுடைய குறித்த நபர் காலநிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்