சிறுவனை அறைந்த பாதிரியார்! - இணையத்தில் பரவிய காணொளியால் பதவியிழப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறுவனை அறைந்த பாதிரியார்!  இணையத்தில் பரவிய காணொளியால் பதவியிழப்பு!!

கிருஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை கன்னத்தில் அறைந்த கட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 
 
கடந்த ஜூன் 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட அந்த 40 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது. குறித்த சிறுவனுக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது சிறுவன் அழுதுகொண்டிருந்துள்ளான். பாதிரியான் அவனை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் சிறுவன் தொடர்ந்து அழ, பாதிரியார் சிறுவனின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இந்த காட்சி காணொளியாக தொலைபேசியில் பதிவாகப்பட்டு, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 
 
இதனால், குறித்த 89 வயதுடைய பாதிரியாரை திருமண நிகழ்வுகளிலோ, ஞானஸ்நானம் செய்யும் நிகழ்வுகளிலோ ஈடுபடக்கூடாது என Champeaux ( Seine-et-Marne )ஐச் diocese of Meaux தடை விதித்துள்ளது. தவிர, இந்த மோசமான செயலுக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

மூலக்கதை