சற்று முன் : பன்னிரெண்டாம் வட்டாரத்தில் தீப்பற்றி எரிந்த மகிழுந்துகள்! - போக்குவரத்து தடை!!
இன்று காலை பரிஸ் 12 ஆம் வட்டாரதில், தரிப்பிடத்தில் நின்றிருந்த மகிழுந்துகள் சில தீப்பற்றி எரிந்தன.
அடுக்குமாடி வளாகத்துக்கு முன்பாக தரித்து நின்ற மகிழுந்துகளே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளன. மொத்தமாக நான்கு மகிழுந்துகள் எரிந்துள்ளதாகவும், ஒரு வாடகை மகிழுந்து முற்றாக எரிந்து அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்-து-லியோன் நிலையத்துக்கு அருகே உள்ள rue Michel-Chasles வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் படர்ந்துள்ளது. தீயணைப்பு படையினர் தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, குறித்த rue Michel-Chasles வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.