புங்குடுதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலங்களால் பதற்றம்!
புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளமையினால் அந்த பகுதியில் சற்று பதற்ற நிலைமை நிலவியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும், அவை உருங்குலைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலங்கள் இதுவரை அடையாளங்காணபடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.