சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஏபி டி வில்லியர்ஸ்

தினகரன்  தினகரன்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஏபி டி வில்லியர்ஸ்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்குப்போட உள்ளார். 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஏபி டி, இது தான் ஓய்வுக்கான சரியான நேரம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;  \'நான் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். ஓய்வுக்கான சரியான நேரம் இது தான். இதனால் மற்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கும். உண்மையை சொல்லப்போனால், நான் சோர்வாகிவிட்டேன். இது ஒரு கடினமான முடிவு தான். என்றாலும், நீண்ட காலமாக சிந்தித்து முடிவு எடுத்தது தான் என்று தெரிவித்தார். மேலும் இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவு கொடுத்த கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார். சர்வதேச போட்டியில் இனி நான் இடம் பெற வாய்ப்பில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகளில் களமிறங்குவேன் என்றார்.

மூலக்கதை