பரிஸ் - பெரும் கலவரம்! - 130 பேர் வரை கைது! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  பெரும் கலவரம்!  130 பேர் வரை கைது!  காவல்துறையினர் மீது தாக்குதல்!!

பரிஸ் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக முற்றுகையிட்டு, பெரும் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 130 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நேற்று, செவ்வாய்க்கிழமை 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Arago உயர்கல்வி பாடசாலைக்கு (லீசே) முன்பாக கூடிய 15,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் 200 வரையான முகமூடி அணிந்த கலவரக்காரர்களும் உள் நுழைந்ததாகவும், அப்பகுதியில் உள்ள கடைகளின் கண்ணாடிகளை உடைத்தும், பேரூந்து கண்ணாடிகளை உடைத்தும் மிக மோசமான வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
ஆர்ப்பாட்டக்குழுவில் இருந்து 24 பேர்களும், கலவரக்காரர்களில்  101 பேரும் பாடசாலை வளாகத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரக்காரர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதனால், காவல்துறை அதிகாரி உட்பட மொத்தம் எட்டு பேர்வரை காயமடைந்திருந்தனர். , கண்ணீர்புகை மற்றும் தண்ணீர் பாய்ச்சி கலவரக்காரர்களை அடக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூலக்கதை