நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா?: நடிகர் கார்த்தி கேள்வி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும்...