குழுவாக சேர்ந்து தாக்குதல்! - நபர் அடித்துக்கொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
குழுவாக சேர்ந்து தாக்குதல்!  நபர் அடித்துக்கொலை!!

38 வயதுடைய நபர் ஒருவரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து மோசமாக தாக்கி, அடித்துக் கொன்றுள்ளனர். 
 
கடந்த வெள்ளிக்கிழமை மே 18 ஆம் திகதி Pau (Pyrénées-Atlantiques) நகரில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட நபர் மேற்கு ஆப்பிரிக்க நாடான Burkinabé இனை சேர்ந்தவர். வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில், வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த நபரினை வழி மறித்து, மிக மோசமாக தாக்கியுள்ளதாகவும், பின்னர் அவர் வீதியிலேயே விடப்பட்டுள்ளார் எனவும், உயிருக்குப் போராடிய அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. மருத்துவக்குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்திருந்த போது அவர் இறந்துவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் கட்ட விசாரணைகளின் படி, கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், எதிர்பாரா விதமாக இந்த உயிரிழப்பு நடந்துள்ளதும் என காவல்துறையினர் தெரிவித்தனர். கதிரை ஒன்றின் மூலம் குறித்த நபர் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

மூலக்கதை