பரிஸ் தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள் விடுவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள் விடுவிப்பு!!

பரிஸ் கத்திக்குத்து தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள், நேற்று சனிக்கிழமை குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 
தாக்குதல் நடத்தியிருந்த பயங்கரவாதி Khamzat Azimov உடன் தொடர்புடையவர்கள் என குறித்த இரு இளம் பெண்களும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்கள். தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இரு பெண்களும் நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த குறித்த பயங்கரவாதியின் நண்பன் Abdoul Hakim A, கடந்த வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டுள்ளான். பரிஸ் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதை தவிர, Abdoul Hakim A. என்பவன் மாத்திரமே தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். 
 
கைது செய்யப்பட்ட இரு பெண்களில், 19 வயதுடைய ஒருவர் பயங்கரவாதி Khamzat Azimov இன் மனைவி என்பதும், முன்னதாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெற்றோர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யபட்டுள்ளனர்.

மூலக்கதை