மார்செய் - வெளியேற்றப்பட்ட Saint-Charles நிலையம்! - நபர் கைது!!
இன்று சனிக்கிழமை மார்செய்யில் உள்ள Saint-Charles நிலையம் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது. நபர் ஒருவர் கைது செய்யபடுள்ளார்.
மர்ம பொதி ஒன்றுடன் நபர் ஒருவர் தொடரூந்து நிலையத்துக்குள் நுழைந்ததாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிலையம் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுக்காவல் நடவடிக்கை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து அவசர ஒலி எழுப்பப்படு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தவலகள் எதுவும் வெளியாகவில்லை..