பரிஸ் தாக்குதல் வழக்கில் - இரு பெண்கள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ் தாக்குதல் வழக்கில்  இரு பெண்கள் கைது!!

கடந்த வார இறுதியில், பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர. முன்னதாக நால்வர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐவர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று வியாழக்கிழமை குறித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பயங்கரவாதி Khamzat Azimov இன் பெற்றோர்களும், அவனுடைய நண்பன் Abdoul Hakim A என்பவனும் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெற்றோர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலதிகமாக இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். இத்தகவல்களை பரிசில் பயங்கரவாத தடுப்புபடையின் உயர் அதிகாரி Molins அறிவித்தார். 
 
கைது செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர், 19 வயதுடைய Ines Hamza ஆவர். இவர் பயங்கரவாதியின் மனைவி எனவும், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சை விட்டு வெளியேறி சிரியா செல்ல முற்பட்டதாகவ்ய்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெண் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 
பயங்கரவாதியால் கொல்லப்பட்ட நபரின் உடலில் மொத்தமாக ஆறு தடவைகள் கத்தியால் குத்தியுள்ளான். இறுதியில் தொண்டையில் கத்தியால் வெட்டியுள்ளான். 2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் மூலம் மாத்திரம் 246 பேர் இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை