பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் குழந்தை பேறுக்குப் பிறகு சர்வதேச களத்தில் செரீனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் குழந்தை பேறுக்குப் பிறகு சர்வதேச களத்தில் செரீனா

பிரெஞ்ச்:திருமணம், குழந்தை, கணவர் என ஓய்வில் இருந்த  செரீனா  வில்லியம்ஸ் இந்த மாதம் 21 ம் தேதி நடக்கவுள்ள பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கடுமையான பயிற்சிக்குப் பிறகு களம்  காண வருகிறார். 9 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை என மகளிர் டென்னிஸின் தங்க மங்கையாக வலம்  வருபவர்  செரினா வில்லியம்ஸ்.

அவரது  காதலரான  அமெரிக்க பிசினஸ்மேன் அலெக்சிஸ் ஒஹானியனை கோலாகலமாகத் திருமணம்  செய்து கொண்டார் செரினா. செரினாவுக்கும்  அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில்  பெண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜூனியர் என்று பெயர் வைத்தார் செரினா. தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக காலத்தை  கழித்து வந்தார்.

தற்போது மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

அபுதாபியில் நடந்த டென்னிஸ் போட்டியில் குழந்தைப் பேறுக்குப்பிறகு மீண்டும் களத்தில் இறங்கினார். இந்த நிலையில் தற்போது உலகப் புகழ்ப்பெற்ற பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களாக கடுமையான பயிற்சிகள்  மேற்கொண்டு அதிரடி ஆட்டத்திற்கு தயாராகி உள்ளார்.

இந்த முடிவினை வரவேற்ற அவரது தீவிர  ரசிகர்கள்  மோஸ்ட்  வெல்கம்  பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் என டுவிட் செய்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

.

மூலக்கதை