ஒலிம்பிக் சிறப்பு பயிற்சிக்கு அங்கீதா ரெய்னா தேர்வு
புதுடெல்லி: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வெல்ல தகுதியான வீரர்களை அடையாளம் கண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பயிற்சி திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கீதா ரெய்னாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் அடையாளம் கண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி அளிக்க உதவி செய்து வருகிறது. இவர்களுக்கான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் வழங்கப்படுகின்றன.
சமீபத்தில் நடந்த ஐ. டி. எப்.
பெண்களுக்கான டென்னிஸ் தொடரில், இந்திய வீராங்கனை அங்கீதா, பிரான்ஸ் வீராங்கனையான அமாண்டி ஹெசியை வீழ்த்தியதின் மூலம் தரவரிசைப்பட்டியலில் ராக்கெட் வேகத்தில் 43 இடங்கள் முன்னேறி 212வது இடம் பிடித்தார்.
இதன் மூலம் ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.
.