சற்று முன்: Mont-Saint-Michel தீவில் இருந்து மக்கள் அவசர வெளியேற்றம்! - ஜோந்தாமினர் அறிவிப்பு!!
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Mont-Saint-Michel தீவில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றபட்டுள்ளனர். ஜோந்தாம் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
பிரான்சுக்கு சொந்தமான இந்த 1 சதுர கிலோமீட்டருக்கும் குறைவான நிலப்பரப்பை கொண்ட தீவில் இருந்து, இன்று அதிகாலை ஜோந்தாமினர்கள் மக்களை வெளியேற்றினர். இதற்குரிய காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சுற்றுலாப்பயணிகள் சிலர் தங்கியிருந்த விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர, தீவைச் சுற்று ஜோந்தாம் அதிகாரிகளின் உலங்கு வானூர்தி வட்டமடிப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இத்தீவின் முதல்வர் Yves Galton'ஐ தொடர்புகொண்டு கேட்டபோது, ' நபர் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்' என சுருக்கமாக தகவல் தெரிவித்தார். மேலதிக தகவல்கள் பின்னர் வழங்கபடும்.