இலங்கை பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கினிகத்தேன, யட்டிபேரிய பிரதேசத்தில் களனி கங்ககையில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கட்டுவல்வேலக, மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 23வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
 
அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று காலை இந்த இளைஞன் மேலும் சிலருடன் களனி கங்கையில் படகு ஊடாக நீர் விளையாட்டில் ஈடுப்பட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்தவரின் சடலம் தலிகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
 
கினிகத்தேன பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை, கினிகத்தேன, யட்டிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீரில் மூழ்கி இளம் நடிகை ஒருவர் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை