நல்லூரில் நுங்கு விற்பனை செய்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
நல்லூரில் நுங்கு விற்பனை செய்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் நுங்கு விற்றவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘ஹெரோய்ன்’ போதைப் பொருள் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் மன்று உத்தரவிட்டது.
 
நுங்கு விற்றவரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது என்று பொலிஸார் குற்றஞ்சாட்டினர். யாழ்ப்பாணம் பதில் நீதிவானிடம் முற்படுத்தினர்.
 
எனினும் அவர் குற்றச்சாட்டை மறுத்தார். தான் நுங்கு விற்கும் இடத்துக்கு அருகில் முச்சக்கரவண்டிக்குக் கீழே இருந்து சுருட்டு ஒன்றைப் பொலிஸார் மீட்டனர்.
 
அதனைக் ஹெரோய்ன் என்றும் அதனை நானே வைத்திருந்தேன் என்றும் குற்றஞ்சாட்டினர் என்றும் நீதிமன்றில் அவர் தெரிவித்தார். எனினும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

மூலக்கதை