பாடசாலைகளில் நாளை சிரமதானப்பணி
மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை சிரமதானப்பணி இடம்பெறும் என்று மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. டெங்கு நுளம்புகளை ஒழிப்பதுடன் எதிர்வரும் விசாக நோன்மதி வாரத்திற்காக பாடசாலைகளை அலங்கரிப்பதும் இதன் நோக்கம் என்று மேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் நிமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் இந்த சிரமதானம் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். The post பாடசாலைகளில் நாளை சிரமதானப்பணி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.