இலங்கையர்களுக்கு வட்சாப் குழுவால் பரப்பப்பட்ட சிறுவர் துஸ்பிரயோக காணொளிகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையர்களுக்கு வட்சாப் குழுவால் பரப்பப்பட்ட சிறுவர் துஸ்பிரயோக காணொளிகள்!

வட்சாப் குழு ஒன்றின் மூலம் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிறுவர் துஸ்பிரயோக காணொளிகளை பரப்பப்பட்டுள்ளது.
 
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று பேர் இந்தியாவின் மத்திய பிரதேசில் கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வந்த இந்த வட்சாப் குழு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிரதானி கைது செய்யப்பட்டார்.
 
அதனைத் தொடர்ந்து அந்த குழுவில் இணைந்திருந்த பலரும் கைதாகி வருகின்றனர்.
 
இதில் பல இலங்கையர்களும் இணைந்திருந்தனர். இந்த நிலையில், இலங்கை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்த இந்தியாவின் மத்தியப்பிரதேஸ் பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

மூலக்கதை