வெள்ளவத்தையில் பரிதாபமாக பலியான இளைஞர்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெள்ளவத்தையில் பரிதாபமாக பலியான இளைஞர்!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 
பேரூந்தின் சில்லில் சிக்குண்டு இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேரூந்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் பேரூந்தில் மோதுண்டு இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
 
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பேரூந்தின் பின்பக்க சில்லுக்குள் சிக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பின்னர் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மூலக்கதை