பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள்..! ஆர்யாவினால் ஏற்பட்ட துயரம்

PARIS TAMIL  PARIS TAMIL
பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள்..! ஆர்யாவினால் ஏற்பட்ட துயரம்

 பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஆர்யாவுக்கான பெண் பார்க்கும் நிகழ்ச்சியில், நைசாக நழுவிய ஆர்யாவைப் பார்த்து மக்கள், ”உங்களுக்கு பணம் கிடைக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா..?” என்று கேட்டு வருகின்றனர்.

 
அதாவது, பிக்கப் டிராப் நடிகரான ஆர்யாவுக்கு, பெண் பார்க்க டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சி துவங்கியபோதே இந்த ஆளு யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று பார்வையாளர்கள் அடித்துக் கூறினர். ஆர்யாவும் அனைத்து போட்டியாளர்களுடனும் நெருங்கிப் பழகி கடலை போட்டு லிட்டர் லிட்டராக ஜொள்ளு விட்டார்.
 
மேலும், போட்டியாளர்களை பார்த்தாலே எப்பொழுது பார்த்தாலும் ஈ என்று பல்லை பல்லை காட்டி ஜொள்ளு விட்டார் ஆர்யா. ஆனால், இறுதியில் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி ஒரு பெண்ணையும் தேர்வு செய்யவில்லை.
 
இதனால் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கோபமடைந்து, ”உங்களுக்குப் படம் ஓடாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டால், நீங்கள் பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா..?” என்று ஆர்யாவை விளாசிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
மூன்றில் ஒரு பெண்ணை மனைவியாக தேர்வு செய்தால் மற்ற இரண்டு பெண்களின் திருமணம் நின்றதுபோது ஆகிவிடும் என்று கூறி எஸ்கேப் ஆனார் ஆர்யா. ஆனால், தற்போது மூன்று பெண்களின் திருமணமும் நின்றது பரவாயில்லையா அவருக்கு..?
 
திரையுலகில் லட்டு லட்டா பார்த்த ஆர்யா, இந்த பெண்களில் யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று பலர் தொடர்ந்து கூறி வந்தது போன்றே நடந்துவிட்டது. ஆர்யாவும் பணத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டிவிட்டார்.
 
அதுமட்டுமல்லாமல், இறுதி நாள் நிகழ்ச்சியில் ஆர்யா ரொம்ப பாவம் போன்று முகத்தை வைத்துக் கொண்டு, வாங்கிய காசுக்கு மேல் சூப்பராக நடித்துவிட்டு சென்றுள்ளார். ”என்ன ஒரு உலகமகா நடிப்புடா சாமி..!” என்று தான் சொல்லத் தோன்றியது ஆர்யாவைப் பார்க்கும் போது.
 

மூலக்கதை