மூன்றாவது நாளாக தொடரும் காவல்துறையினர் மீதான தாக்குதல்! - ஆறுபேர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
மூன்றாவது நாளாக தொடரும் காவல்துறையினர் மீதான தாக்குதல்!  ஆறுபேர் கைது!!

கடந்த இரண்டு நாட்களை தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாவது நாளாக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் 29 மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன. 
 
Toulouse நகரில் இந்த வன்முறை வெறியாட்டம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துலுசின் Reynerie நகரில் செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாவது நாளாகக் கூடிய முகமூடி அணிந்த இளைஞர்கள் பலர், வீதிகளில், வீட்டின் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்துகளின் கண்ணாடிகளை உடைத்து, பெற்றோல் ஊற்றி எரியூட்டியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீதும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். திங்கட்கிழமை இரவு 25 வாகனங்கள் எரியூட்டப்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு 29 வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. 
 
200 காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டதோடு, உலங்குவானூர்தியும் வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்களை அடக்கினர்.  சம்பவத்தின் முடிவில் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை