ஆர்யாவின் இறுதி முடிவு! கடுப்பான சுசானாவின் தந்தை கேட்ட கேள்விகள்
ஆர்யா நேற்றைய தினம் தனது வாழ்க்கை துணையை அறிவிப்பார் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வேளை தன்னால் உறுதியாக ஒருவரை தெரிவு செய்ய முடியவில்லை. எனக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை. இந்த மூன்று பெண்களும் என்னுடன் உண்மையாக பழகினார்கள். நானும் அவர்களுக்கு உண்மையாகவே இருந்தேன்.
ஆனாலும் என் மனதில் ஒருவரை எனும் முடிவு செய்யவில்லை. இதனால் இவர்களை எனது உற்ற நண்பர்களாக அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஈழத்து பெண் சுசனாவின் தந்தையார் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். மூன்று மாதங்களுக்கு மேல் என் மகளை பிரிந்து இருந்தேன். அவளின் மகன் தாயை பிரிந்து இருந்தான்.
மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் கனடாவில் இருந்து வந்திருந்தோம். ஆனால் இறுதியில் உங்களின் முடிவு சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
என் மகள் மிகவும் அமைதியானவள். நல்ல பாசமானவள். அவளை பிரிந்து இருந்த நாட்கள் மிகவும் கடினமானவை. இதெல்லாம் உங்களுக்கு எங்கு புரிய போகிறது. நீங்கள் உண்மையாகவே திருமணம் செய்யத்தான் இந்நிகழ்ச்சிக்கு வந்தீர்களா ? இல்லை மேலும் இதை ஒரு தொடர் போல கொண்டு போவீர்களா? என்று கோபமாக ஆர்யாவை பார்த்து கேட்டார்.
பெற்றோரின் வேதனையை உணர்ந்த ஆர்யா அவரை சமரசம் செய்ய முயன்றார். அனால் அவர் ஆர்யா மீதும் அந்த தனியார் சனல் மீதும் அளவு கடந்த வெறுப்பில் இருந்தார்.