SNCF : தொடரும் ஆர்ப்பாட்டம்! - இன்றைய போக்குவரத்து தடை நிலவரம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
SNCF : தொடரும் ஆர்ப்பாட்டம்!  இன்றைய போக்குவரத்து தடை நிலவரம்!!

இன்று, ஏப்ரல் 18, புதன்கிழமை SNCF தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். கணிசமாக போக்குவரத்துக்கள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தொழிலாளர்களில் 32 வீதமானவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என SNCF நிர்வாகம் அறிவித்துள்ளது. TGVக்களில் மூன்றில் ஒரு சேவையும் Transiliens  சேவைகளில் ஐந்தில் ஒரு சேவையுமே இன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை TER சேவைகளில் ஐந்தில் இரண்டு மத்திரமே இயங்கும். இண்டர்சிட்டி சேவைகள் ஐந்தில் ஒன்று மாத்திரமே இயங்கும். 
 
நான்காவது பகுதி இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்தது. இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பணி பகிஷ்கரிப்பு முடிந்து, வெள்ளிக்கிழமை காலை 7.55 மணிக்கு ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள். 
 
அடுத்தகட்ட இருநாள் வேலைநிறுத்தம் இம்மாதம் 25 ஆம் திகதி இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை