Poissy - மாமன் மற்றும் தாயாரை கத்தியால் தாக்கிய நபர்! - கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
Poissy  மாமன் மற்றும் தாயாரை கத்தியால் தாக்கிய நபர்!  கைது!!

30 வயதுடைய நபர் ஒருவர், அவரது தந்தை மற்றும் தாயாரை கத்தியால் குத்தி மிக மோசமாக தாக்கியுள்ளார். சனிக்கிழமை இச்சம்பவம் Poissy இல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
 
சனிக்கிழமை இரவு 9 மணி அளவில், Poissy, (Yvelines) இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது மாமன் உறவுமுறை உள்ள நபரை முதலில் கத்தியால் மிக மோசமாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தனது தாயையையும் தாக்கியுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல்தாரியை கைது செய்துள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் தாயார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வருகின்றார். 
 
காவல்துறையினர் தாக்குதல்தாரியை கைது செய்ய முற்படும் போது தப்பித்து ஓட முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Poissy பிராந்திய காவல்நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை