உறவினர் வீட்டிற்கு சென்ற மகனுக்கு தந்தை செய்த கொடூரம்! மாங்குளத்தில் சம்பவம்
மாங்குளம் நீதிபுரம் பகுதியைச் பாடசாலை மாணவன் ஒருவர், இரண்டு கால்களும் முறிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோ.இசைப்பிரியன் என்ற 12 வயதுச் சிறுவனவே வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் கடந்த சில நாள்களாக வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் நேற்றுக் காலை வீட்டிற்கு வந்த சிறுவனை அவரது தந்தை தாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை தாய் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சென்றுள்ளார்.
அங்கிருந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் சிறுவன் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டனர்.
சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில், கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுவனின் தந்தை ஏற்கனவே தனது மகளுக்கு தாக்கிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்னர்.