சுந்தரபாண்டியன் 2 - என்ன குழப்பமோ?

தினமலர்  தினமலர்
சுந்தரபாண்டியன் 2  என்ன குழப்பமோ?

'சுப்பிரமணியபுரம்', 'ஈசன்' ஆகிய படங்களில் தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஆர்.பிரபாகரனை 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் சசிகுமார். சுந்தரபாண்டியன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

அந்த படத்தை தொடர்ந்து உதயநிதி, நயன்தாராவை வைத்து 'இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கினார். அந்தப்படம் சுமாராகத்தான் ஓடியது. அடுத்து விக்ரம்பிரபுவை வைத்து, 'சத்ரியன்' படத்தை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். சத்ரியன் படம் தோல்வியடைந்ததினால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தவர் தனது அடுத்த படமாக 'சுந்தரபாண்டியன்-2' படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சசிகுமாரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்போது 'அசுரவதம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சசிகுமார் தொடர்ந்து 'நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 'சுந்தரபாண்டியன்-2' படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சசிகுமார்.

இந்த படம் குறித்த செய்திகள் இயக்குநர் தரப்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டநிலையில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருப்பது 'சுந்தரபாண்டியன்-2' அல்ல என்று தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.

கடைசிநேரத்தில் என்ன குழப்பமோ?

மூலக்கதை