கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்!!
கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் பரிஸ் உட்பட நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஈஃபிள் கோபுரம் திறப்பதற்கு தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுக்குள் -1° வரை காலநிலை நிலவியது. ஈபிள் கோபுரத்தின் மூன்றாவது தளம் முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டிருந்தது. பின்னர் நண்பகலுக்கு சற்று முன்னதாக கோபுரம் பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
முன்னதாக இவ்வருட ஆரம்பத்திலும் கடும் குளிர் காரணமாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.