நான்கு மணிநேரம் பாடசாலை பேரூந்துகுள் சிக்குண்ட 3 வயது சிறுவன்!!
மூன்று வயதுடைய சிறுவன் ஒருவன், பாடசாலை பேரூந்துக்குள் பேரூந்து சாரதியோ, பாடசாலை ஆசிரியரோ அறியாத வண்ணம் நான்கு மணிநேரங்கள் மறைந்து இருந்துள்ளான்.
செவ்வாய்க்கிழமை காலை Dordogne நகரில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. 3 வயதுடைய Lilou எனும் சிறுவன், பாடசாலை பேரூந்தில் வீட்டில் இருந்து ஏறி மழலையர் பாடசாலைக்குச் சென்றுள்ளான். ஆனால் அதன் பின்னர் Lilou காணாமல் போயுள்ளதை நான்கு மணிநேரங்கள் கழித்து, அவனது 9 வயதுடைய சகோதரி கண்டுபிடித்துள்ளார். 'தம்பியை முத்தமிடுவதற்காக வந்த சகோதரி, Lilouஐ காணவில்லை என பாடசாலை ஆசிரியருக்கு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பரபரப்பாகிய இந்த சம்பவம், பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த சிறுவன் பின்னர் நான்கு மணிநேரங்கள் கழித்து பேரூந்துக்குள் இருந்து சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். பேரூந்து சாரதியின் கவனயீனம், பாடசாலை நிர்வாகிகளின் அலட்சியம் என பல்வேறு கட்ட விசாரணைகள் பின்னர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.