மார்ச் 15 – 29 வரை நடைபெறுகிறது:ஏற்றுமதியாளர்கள் நிலுவைக்கு தீர்வு காண ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ முகாம்களுக்கு ஏற்பாடு

தினமலர்  தினமலர்
மார்ச் 15 – 29 வரை நடைபெறுகிறது:ஏற்றுமதியாளர்கள் நிலுவைக்கு தீர்வு காண ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ முகாம்களுக்கு ஏற்பாடு

புதுடில்லி:ஏற்­று­ம­தி­யா­ளர்­களின், ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கில், நாடு முழு­வ­தும், சிறப்பு முகாம்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.‘வரும், 15ல் துவங்கி, 29 வரை நடை­பெ­றும் இந்த முகாம்­களை அணுகி, செலுத்­திய வரியை திரும்­பப் பெறு­வது தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தீர்வு காண­லாம்’ என, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் தெரி­வித்து உள்­ளது.
ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பலர், வெளி­நா­டு­களில் இருந்து மூலப்­பொ­ருட்­களை இறக்­கு­மதி செய்து, மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­க­ளாக மாற்றி, ஏற்­று­மதி செய்­கின்­ற­னர்.இத்­த­கை­யோர், இறக்­கு­மதி செய்­யும் பொருட்­க­ளுக்கு, 0.1 சத­வீ­தம் வரி செலுத்­து­கின்­ற­னர். பின், மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்து, அது தொடர்­பான ஆவ­ணங்­களை அளித்து, இறக்­கு­ம­தி­யின் போது செலுத்­திய, 0.1 சத­வீத வரியை திரும்­பப் பெறு­கின்­ற­னர்.இது தவிர, ஏ.ஏ., இ.பி.சி.ஜி., மற்­றும், இ.ஓ.யு., திட்­டங்­களின் கீழ், உள்­நாட்­டில் கொள்­மு­தல் செய்­யும் பொருட்­க­ளுக்கு செலுத்­தும், ஜி.எஸ்.டி., அல்­லது, ஐ.ஜி.எஸ்.டி.,யும், சப்­ளை­யர்­கள் அல்­லது ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு திரும்ப வழங்­கப்­ப­டு­கிறது.
இந்த வகை­யில், மூலப்­பொ­ருட்­கள் இறக்­கு­ம­திக்கு செலுத்­திய வரி மற்­றும் ஏற்­று­ம­தி­யின் போது, துறை­மு­கங்­களில் செலுத்­திய வரி விப­ரங்­களை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 மற்­றும், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படி­வங்­களில் தாக்­கல் செய்­கின்­ற­னர்.
இந்த படி­வங்­களில் உள்ள விப­ரங்­கள், ஒன்­றுக்கு ஒன்று பொருந்­தும் பட்­சத்­தில், ஏற்­று­மதி செய்த ஒரு வாரத்­தில், செலுத்­திய வரி­யில், 90 சத­வீ­தத்தை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் திரும்­பப் பெற­லாம்.கணக்கு தாக்­க­லில் பிழை­கள் அல்­லது தவ­று­கள் இருந்­தால், ‘ரீபண்டு’ வழங்­கு­வது தாம­த­மா­கும். இதற்கு, வரியை கணக்­கி­டு­வ­தி­லும், ஜி.எஸ்.டி., நடை­முறை சிக்­க­லும் கூட, ஒரு­வ­கை­யில் கார­ணம் என­லாம்.இந்த தாம­தத்­தால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க முடி­யா­மல் தத்­த­ளிக்­கின்­ற­னர்.
இது குறித்து, மத்­திய நேரடி வரி­கள் வாரிய தலை­வர், வனஜா சர்னா கூறி­ய­தா­வது:நாடு முழு­வ­தும், 15 – 29 வரை நடை­பெ­றும் சிறப்பு முகாம்­களில், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ‘ரீபண்டு’ பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண­லாம். அவர்­களின் கணக்கு தாக்­க­லில் உள்ள தவ­று­களை சரி­செய்ய, அதி­கா­ரி­கள் உத­வு­வர். இம்­மாத இறு­திக்­குள், பெரும்­பான்மை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, நிலுவை கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
நீட்டிப்பு
ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு திரும்ப அளிக்க வேண்­டிய தொகை­யில், இது­வரை, 5,000 கோடி ரூபாய் வழங்­கப்­பட்டு உள்­ளது. இன்­னும், 70 சத­வீத தொகை, எட்டு மாதங்­க­ளாக நிலு­வை­யில் உள்­ளது. ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், வரியை திரும்­பப் பெற விண்­ணப்­பிக்­கும் கால வரம்பு, அக்., வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. ‘இ – வாலட்’ மூலம், ‘ரீபண்டு’ அளிக்­கும் வசதி, அக்­டோ­ப­ரில் அம­லுக்கு வர உள்­ளது.

மூலக்கதை