தென் கொரிய பாதிப்பை தடுக்க தங்கம் இறக்குமதியை தீவிரமாக கண்காணிக்க சுங்க துறை முடிவு

தினமலர்  தினமலர்
தென் கொரிய பாதிப்பை தடுக்க தங்கம் இறக்குமதியை தீவிரமாக கண்காணிக்க சுங்க துறை முடிவு

புதுடில்லி : தென் கொரி­யா­வில் இருந்து, அதி­க­ள­வில் தங்­கம் இறக்­கு­ம­தி­யா­வதால், அந்­நாட்­டு­ட­னான தாராள வர்த்­தக ஒப்­பந்­தத்­தில், விதி­மீ­றல் நடை­பெ­று­கி­றதா என்­பதை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க, சுங்­கத் துறை முடிவு செய்­துள்­ளது.

இந்­தியா, தென் கொரியா உடன், 2010ல், தாராள வர்த்­தக ஒப்­பந்­தம் செய்து கொண்­டது. இதன்­படி, இரு நாடு­களும், அடிப்­படை வரி­யின்றி, பரஸ்­ப­ரம் தங்­கத்தை இறக்­கு­மதி செய்து கொள்­ள­லாம்.இந்­நி­லை­யில், ஜூலை­யில், பல­முனை வரி­கள் ஒழிந்து, ஒரே வரி விதிப்பு முறை­யான, ஜி.எஸ்.டி., அம­லா­னது. அதில், ஏற்­க­னவே, தங்­கம் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்த விதிக்­கப்­பட்­டு இருந்த, 12.5 சத­வீத கூடு­தல் வரி சேர்க்­கப்­பட்­டது.

இதன்­படி, தங்­கம் இறக்­கு­ம­திக்­கான மொத்த வரி­யி­னம், 10 சத­வீ­த­மாக உள்­ளது. ஆனால், தாராள வர்த்­தக ஒப்­பந்­தம் கார­ண­மாக, தென் கொரி­யா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் தங்­கத்­திற்கு, 3 சத­வீத, ஐ.ஜி.எஸ்.டி., தான் கணக்­கி­டப்­ப­டு­கிறது.அத­னால், ஜூலை­யில், தென் கொரி­யா­வில் இருந்து அதி­க­ள­வில் தங்­கம் இறக்­கு­மதி­யா­னது. இம்­மா­தத்­தில், தங்­கம் இறக்­கு­மதி, 210 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, 2016 ஜூலை­யில், 107 கோடி டால­ராக இருந்­தது.

பரிசோதனை:
தங்­கம் இறக்­குமதி, திடீ­ரென உயர்ந்­ததை அடுத்து, மத்­திய வர்த்­த­கம், சுங்­கம், பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை அதி­கா­ரி­கள், ரிசர்வ் வங்கி உய­ர­தி­கா­ரி­கள் ஆகி­யோ­ரின் கூட்­டம், டில்­லி­யில் நடை­பெற்­றது. இதில், தென் கொரியா உட­னான ஒப்­பந்­தத்தை பயன்­ப­டுத்தி, இறக்­கு­ம­தி­யில் விதி­மீ­றல்­கள் நடக்­கின்­ற­னவா என்­பதை, தீவி­ர­மாக கண்­காணிக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, இக்­கூட்­டத்­தில் பங்­கேற்ற உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: தற்­போது, தங்­கம் இறக்­கு­மதி குறித்து, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் ஆவ­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில், சுங்க அதி­கா­ரி­கள் அனு­மதி வழங்கி வரு­கின்­ற­னர். இனி, சந்­தே­கத்­திற்கு இட­மான தங்­கம் இறக்­கு­ம­தியை, தற்­கா­லி­க­மாக மதிப்­பிட்டு, வங்கி உத்­த­ர­வா­தத்­தின் அடிப்­ப­டை­யில், ஒப்­பு­தல் வழங்க, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. அத­னால், இனி, தங்­கம் இறக்­கு­ம­தி­யா­கும் ஒவ்­வொரு சரக்கு பெட்­ட­கங்­களும், முழு­மை­யான பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும். இந்த நடை­மு­றை­யில், வங்கி உத்­த­ர­வா­தத்­திற்­காக, அதிக தொகை முடங்­கும் வாய்ப்பு உள்­ள­தால், அதி­க­ள­வில் தங்­கத்தை இறக்­கு­மதி செய்ய, இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் விரும்ப மாட்­டார்­கள் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

திருத்தம்:
தென் கொரியா உட­னான, தாராள வர்த்­தக ஒப்­பந்­தத்­தில், பொருட்­க­ளின் மதிப்பை கூட்­டு­வ­தற்­கான அள­வீடு, இதர, ‘ஆசி­யான்’ நாடு­க­ளு­டன் செய்து கொண்ட இதே ஒப்­பந்­தத்­தில் உள்­ளதை விட, குறை­வாக உள்­ளது. எனவே, தென் கொரியா உடனான, ஒப்­பந்த ஷரத்­து­களில் திருத்­தம் செய்­வது குறித்து பரி­சீ­லிக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.இக்­கூட்­டத்­தில், தங்­கம் இறக்­கு­ம­திக்கு பாது­காப்பு வரி விதிப்­பது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது. ஆனால், நீண்ட ஆய்­வுக்கு உட்­பட்ட நட­வ­டிக்கை என்­ப­தால், அந்த யோசனை கைவி­டப்­பட்­டது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை